அதிமுக கூட்டணி சார்பில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக  வேட்பாளர் பி.வேணுகோபாலை ஆதரித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.


திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக  வேட்பாளர் பி.வேணுகோபாலை ஆதரித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், எல்.ஆர்.மேடு, தோக்கம்மூர் ஆகிய பகுதிகளில் அதிமுக மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜெ.சுரேஷ் தலைமையில் அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
அதேபோல கும்மிடிப்பூண்டியில் அதிமுக நிர்வாகிகள் மு.க.சேகர், எஸ்.டி.டி.ரவி, ராஜேந்திரன், மனோகரன், லட்சுமி மற்றும் பாமக, பாஜக, தேமுதிக நிர்வாகிகள் பஜார் மற்றும் பைபாஸ் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் வாக்கு சேகரித்தனர்.
நாயுடுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஒன்றியச் செயலாளர் கோபால்நாயுடு தலைமையிலும், எகுமதுரை பகுதியில் அதிமுக பாசறைச் செயலாளர் டி.சி.மகேந்திரன் தலைமையிலும் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். அதிமுக அரசின் சாதனைகளையும், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com