தேர்தல் பிரசார நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக அதிமுக, கூட்டணிக் கட்சியினர் திருத்தணியில் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் ஊராட்சியில் ஒன்றிய அதிமுக துணைச் செயலர் டி.எம்.சீனிவாசன், கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக வீடு, வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.