விபத்தில் முதியவர் சாவு

திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.        


திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயம் அடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.        
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (38). அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் கோவிந்தராவ் (78).  கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தில் பேரம்பாக்கம்-திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது, திடீரென வாகனத்தை பிரேக் பிடித்து நிறுத்த முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக தூக்கி வீசப்பட்டார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோவிந்தராவ் உயிரிழந்தார்.
இதுகுறித்து பேரம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரபாகரன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com