அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற சத்துணவு அமைப்பாளர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
கிருஷ்ண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு (54) , மேல் திருத்தணி அமிர்தபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர்.
சுதந்திர தின விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்ட தங்கவேலு திடீரென மயங்கி விழுந்தார். திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள் தங்கவேலு இறந்ததாகத் தெரிவித்தனர். திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.