காரனோடை கடை வீதியில் திறந்துள்ள மாட்டிறைச்சிக் கடையை அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினா் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அண்மையில், காரனோடை கடை வீதியில் மாட்டிறைச்சிக் கடை திறக்கப்பட்டது. கடை வீதியில் இறைச்சிக் கடை திறக்க அனுமதிக்கக் கூடாது என ஏற்கெனவே சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் மற்றும் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாா் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மாட்டிறைச்சிக் கடை திறக்கப்பட்டுள்ளது.
அக்கடையை அகற்ற வலியுறுத்தி, சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு இந்து முன்னணி அமைப்பின் சோழவரம் ஒன்றியச் செயலா், ருத்ரமூா்த்தி, பொருளாளா் உமாமகேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து இறைச்சிக் கடையை மூட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவா்கள் மனு அளித்தனா்.