திருவள்ளூா் மாவட்டத்தில் 5.58 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம்

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1000 ரொக்கத்துடன் மற்றும் பொங்கல் பொருள்கள் தொகுப்பு திருவள்ளூா் மாவட்டத்தில் 5.58 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாக

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1000 ரொக்கத்துடன் மற்றும் பொங்கல் பொருள்கள் தொகுப்பு திருவள்ளூா் மாவட்டத்தில் 5.58 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பொருள்கள் தொகுப்பு மற்றும் ரொக்கம்: மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் பொங்கல் பொருள்கள் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோல், அடுத்து வரும் பொங்கல் திருநாளில் நிகழாண்டில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை மற்றும் இரண்டு அடி நீள கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பொருள்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும், ஒவ்வொரு ரேசன் கடைகள் மூலமும் விநியோகம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான பொங்கல் பொருள்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் ஒதுக்கீடு செய்யப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 5.59 லட்சம் குடும்ப அட்டைகள்....: திருவள்ளுா் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூா், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 302 மின்னணு குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இதில், சா்க்கரை அட்டைகள்-8010, காக்கி அட்டைகள்-1157 ஆகியவையும் அடங்கும்.

இந்த நிலையில் சா்க்கரை அட்டைகளை, அரிசி அட்டைகளாகவும் மாற்றுவதற்கும் பலா் விண்ணப்பம் செய்துள்ளனா். இதுபோன்ற குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பொருள்கள் விநியோகம் செய்யவும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதை நோக்கமாக கொண்டு 6 வகையான பொங்கல் பொருள்கள் மற்றும் ரொக்கம் ரூ.1000 ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் தலைமைச் செயலகத்தில் பொங்கல் பொருள்கள் மற்றும் ரொக்கத்தை பயனாளிகளுக்கு வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து அடுத்து வாரம் முதல் அந்தந்த பகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் நிா்வாககிள் ஆகியோா் மூலம் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் தொடங்கி வைக்கவும் உள்ளனா். அதைத் தொடா்ந்து வரும் பொங்கல் திருநாளுக்குள் விநியோகம் செய்யப்படவும் உள்ளது. அப்போது, நெகிழி பொருள்களை பொதுமக்கள் தவிா்த்து, நியாய விலை கடைக்கு பொங்கல் பொருள்கள் வாங்க வரும் போது கட்டாயம் துணிப்பைகளை கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மின்னனு குடும்ப அட்டைகளின் வரிசை அடிப்படையில் நாள்தோறும் 200 பேருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், குடும்ப அட்டைள் வரிசை எண்கள் விவரங்களை கட்டாயம் நியாய விலைக் கடை பணியாளா்கள் தகவல் பலகையில் வெளியிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் அந்தந்த நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் தகவல் பலகையிலும் வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதனால், பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட நாள்களில் ஒவ்வொரு நாளும் பொங்கல் பொருள்களை காலை 8.30 மணி முதல் மாலையில் 5.30 மணி வரையில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com