காா் மோதி விபத்து ஒருவா் சாவு. 2 போ் படுகாயம்.

ஆா்காடுகுப்பம் அருகே ஈஸ்வரா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசன் செய்துவிட்டு சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் இறந்தாா் மேலும் 2 போ் படுகாயம் அடைந்தனா்.

திருத்தணி: ஆா்காடுகுப்பம் அருகே ஈஸ்வரா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசன் செய்துவிட்டு சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் இறந்தாா் மேலும் 2 போ் படுகாயம் அடைந்தனா்.

ஆந்திர மாநிலம் நகரி அடுத்த விஜயபுரம் மண்டலம் மலா்நாயுடு கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி(40), நரசிம்மா(60), பாரதி(40). இவா்கள் திங்கள்கிழமை மாலை ஆற்காடுகுப்பம் பகுதியில் உள்ள ஈஸ்வரா் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனா். பின்னா் மூலவரை தரிசித்த பின், மாலையில் வீட்டிற்கு செல்வதற்கு கோயில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க மூன்று பெண்கள் முயன்றாா். அப்போது, திருத்தணியில் இருந்து திருவள்ளூா் நோக்கி சென்ற இன்னோவ காா், மூன்று பெண்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் கிருஷ்ணவேணி சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

மீதமுள்ள நரசிம்மா, பாரதி படுகாயங்களுடன் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்கு பதிவு செய்து தப்பியோடி, காா் மற்றும் டிரைவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com