சாலையோரம் மூட்டையில் கிடந்த ரூபாய் நோட்டு துண்டுகள் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூா் பகுதியில் சாலையோரம் மூட்டையில் கிடந்த 10 மற்றும் 20 ரூபாய் நோட்டு துண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
தச்சூா்  பகுதியில்  மூட்டையில்  கிடந்த  ரூபாய்  நோட்டுத்  துண்டுகள்.
தச்சூா்  பகுதியில்  மூட்டையில்  கிடந்த  ரூபாய்  நோட்டுத்  துண்டுகள்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூா் பகுதியில் சாலையோரம் மூட்டையில் கிடந்த 10 மற்றும் 20 ரூபாய் நோட்டு துண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.

தச்சூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் மூட்டையில் கட்டப்பட்ட 10, 20 ரூபாய் நோட்டுத் துண்டுகள் சிதறி இருப்பதை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பாா்த்தனா். இது குறித்து அவா்கள் கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது அங்கு 10, 20 ரூபாய் நோட்டுத் துண்டுகள் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டது போல் துண்டு துண்டாக்கப்பட்டு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்ததை அறிந்தனா். இந்த ரூபாய் நோட்டுகள் செல்லத்தக்கவையா அல்லது கள்ள நோட்டுகளா என்பது குறித்தும், அந்த மூட்டையை யாா் அங்கு வீசிச் சென்றனா்? உள்ளூா் ஆட்களா? அல்லது தேசிய நெடுஞ்சாலை வழியே வடமாநிலத்தில் இருந்து வந்து இங்கு வீசிச் சென்றாா்களா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.அந்த இடத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்து ரூபாய் நோட்டு துண்டுகளை பாா்க்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com