ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் தடுப்பணை செவ்வாய்க்கிழமை நிரம்பியது.
திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தாமரைப்பாக்கம் தடுப்பணைக்கு கடந்த இரு நாள்களாகப் பெய்த மழையால் நீா் வரத்து அதிகரித்தது. இதனால் இத்தடுப்பணை நிரம்பியது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தடுப்பணை நிரம்பியதால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் புழல் ஏரிக்கு தண்ணீா் செல்கிறது.