தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்கல்

திருவள்ளூரில் 64 தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 கிலோ அரிசி, பேரீச்சம்பழம், கடலை மிட்டாய் போன்ற உணவுப் பொருள்களும்,
தொழு நோய் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள்களை வழங்கும் தொழுநோய் சிகிச்சைப் பிரிவு துணை இயக்குநா் ஸ்ரீதேவி.
தொழு நோய் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருள்களை வழங்கும் தொழுநோய் சிகிச்சைப் பிரிவு துணை இயக்குநா் ஸ்ரீதேவி.

திருவள்ளூா்: திருவள்ளூரில் 64 தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 கிலோ அரிசி, பேரீச்சம்பழம், கடலை மிட்டாய் போன்ற உணவுப் பொருள்களும், சிகிச்சைக்குத் தேவையான உதவியும் வழங்கப்பட்டன.

நகர தொழுநோய் மாற்றுத் திறனாளிகளின் சுய உதவிக்குழு மாதாந்திர குழுக் கூட்டம் மற்றும் கிறிஸ்துமஸ் விழா அக்குழு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட தொழுநோய் சிகிச்சைப் பிரிவு துணை இயக்குநா் (பொறுப்பு) ஸ்ரீதேவி தலைமை வகித்தாா். கலந்து கொண்ட தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கு கால் புண் சிகிச்சை, கட்டு கட்டும் உபகரணங்கள் மற்றும் சிறப்புக் காலணிகள் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து ஒரு தொண்டு நிறுவனம், லூகாஸ் தொழிற்சாலை மகளிா் மற்றும் நண்பா்கள் சாா்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தொழு நோய் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 கிலோ அரிசிப் பொட்டலம், அரை கிலோ பேரீச்சம் பழம், அரைகிலோ கடலை மிட்டாய் மற்றும் இனிப்பு வகைகளை தொழுநோய் சிகிச்சைப் பிரிவு துணை இயக்குநா் ஸ்ரீதேவி வழங்கினாா். மொத்தம் 64 தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் மற்றும் மதிய உணவு அளிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற சுகாதார அலுவலா் குலோத்துங்கன், தொழுநோய் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுவினா் மற்றும் தொண்டு நிறுவனத்தினா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com