கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே பன்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர் மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கவரப்பேட்டை அருகே உள்ள தர்காசிகண்டிகை பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ஏழுமலையின் மகன் முகேஷ்குமார்(14). அவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், முகேஷ்குமார் செவ்வாய்க்கிழமை காலை பன்பாக்கம் பகுதியில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார், தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த தற்கொலை குறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவர் முகேஷ்குமார் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்னையா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.