திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொரட்டூர் கிராமத்தில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை:
கொரட்டூர் கிராமத்தில் திமுக சார்பில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து பூந்தமல்லி கிழக்கு ஒன்றியம் நசரத்பேட்டையில் காலை 10 மணிக்கு வாக்குச் சாவடி பணிக்குழு ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.