முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பொறுப்பேற்பு
By DIN | Published On : 28th February 2019 05:53 AM | Last Updated : 28th February 2019 05:53 AM | அ+அ அ- |

புழல் காவல் நிலையத்துக்கு புதிய காவல் (சட்டம் - ஒழுங்கு) ஆய்வாளர் பொறுப்பேற்றார்.
காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், புழல் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த நடராஜ் பழவந்தாங்கல் காவல் நிலையத்துக்கும், அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.அன்புக்கரசன் புழல் காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர். இதையடுத்து, புழல் காவல் நிலையத்தில் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளராக எஸ்.அன்புக்கரசன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.