மீஞ்சூர் ரயில் நிலைய பகுதியில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதற்காக பதுங்கியிருந்த 8 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வருவதாகவும், அவர்கள் அங்குள்ள ரயில்வே குடியிருப்பு அருகில் பதுங்கியிருப்பதாகவும் மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மீஞ்சூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று அப்பகுதியில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மறைந்திருந்த 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.