திருவாலங்காடு அருகே பேருந்து நிழற்குடை மீது லாரி மோதியதில் பள்ளி மாணவர்கள் இருவர் பலத்த காயம் அடைத்தனர்.
திருவாலங்காடை அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், வழக்கம் போல் சனிக்கிழமை இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல, பேருந்துக்காக நிழற்குடையில் காத்திருந்தனர். அப்போது, அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி பேருந்து நிழற்குடையில் மோதியது. இதில், பள்ளி மாணவர்கள் யாமினி, மகேஷ்பாபு ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குஅவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, திருவாலங்காடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.