திருத்தணி அருகே கூளூர் கிராமத்தில் வீட்டின்பூட்டை உடைத்து 5 சவரன் நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பாலன்(48). இவர் திருவள்ளூரில் உள்ள ஓட்டலில் சர்வராக வேலை செய்து வருகிறார். அவர் கூளூர் கிராமத்தில் தனியாக தங்கியுள்ளார். வியாழக்கிழமை காலை பாலன் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு, வேலைக்கு சென்றார். வெள்ளிக்கிழமை மதியம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகைகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.