திருவள்ளூரை அடுத்த காக்களூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
அமமுக சார்பில் காக்களூர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஒன்றியச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான தண்ணீர்குளம் ஏழுமலை பங்கேற்றார். நிகழ்வில் பொங்கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து, பொங்கல், கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.