மாதவரம் அருகே அமமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை அக்கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெற்றிநகர் பகுதிச் செயலர் மு.சுந்தர் தலைமையில் நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர். உருவப் படத்துக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து, ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அன்னதானம் செய்தனர்.
அதேபோல், மாதவரம் பகுதி அமமுக செயலர் எஸ்.ரகு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலர் திருவொற்றியூர் எஸ்.எம்.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு,
எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில் வட்டச் செயலர் ஜீவன் ஸ்ருதிமணி, சி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.