மாதவரம் காவல் மாவட்டத்தின் புதிய காவல் துணை ஆணையராக ரவளிபிரியா கந்தபுனேனி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
அவருக்கு மாதவரம் காவல் மாவட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்த சி.கலைச்செல்வன், சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டார். வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்த ரவளிபிரியா கந்தபுனேனி, மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவர் வெள்ளிக்கிழமை மாதவரம் காவல் மாவட்ட துணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மாதவரம் காவல் மாவட்ட உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து தங்களை அறிமுகம் செய்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.