மாதவரம் அருகே, மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாதவரம் பகுதி மதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பகுதிச் செயலர் ஏ.வி.ராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை புழல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலர் டி.சி.ராஜேந்திரன் பங்கேற்றார்.
இதில், தேர்தல் நிதி திரட்டுவது, வாக்குச் சாவடி முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.