விளையாட்டு போட்டியில் மோதல்: 5 பேர் காயம்

பொன்னேரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர். 

பொன்னேரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற காணும் பொங்கல் விழாவில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர். 
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாளிவாக்கம் கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அப்போது, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினரை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாளிவாக்கம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாளிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில், சரண், விஜி, சுரேந்தர் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com