25-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறும் நோக்கில், ஜன. 25-ஆம் தேதி

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறும் நோக்கில், ஜன. 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் ஜன.25-இல் நடைபெற உள்ளது. 
இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலைத் துறை, வருவாய்த் துறை, மின்வாரியம், கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதனால், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ அளிக்கலாம். இக்கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதில், மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com