சாலைப் போக்குவரத்து சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள போக்குவரத்து சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், நல்லூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்கள், நுழைவுக் கட்டணம் அளித்துச் செல்ல வேண்டும் என்ற விதியை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும். சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வை பாதிக்கும் போக்குவரத்து சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.