ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயில் குளத்தை வடபழனி உழவாரப் பணிக் குழுவினர் அண்மையில் தூய்மைப்படுத்தினர்.
இக்கோயில் கோயில் குளத்தைச் சுற்றிலும் குப்பைகள் சேர்ந்ததால் அப்பகுதி தூய்மையற்ற நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், வடபழனி உழவாரப் பணிக் குழுவினர் நடைப்பயணமாக வடபழநியிலிருந்து சிறுவாபுரி வந்தடைந்தனர். பின்னர், கோயில் குளத்தில் உள்ள தேவையற்ற பாசி மற்றும் நெகிழிகளை எடுத்து குளத்தை தூய்மைப்படுத்தினர்.