பாஜக-வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, அதைக் கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ்  கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.


கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி, அதைக் கண்டித்து திருவள்ளூரில் காங்கிரஸ்  கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். கட்சியின் ஓபிசி பிரிவு மாநிலச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஏகாட்டூர் ஆனந்தன், வழக்குரைஞர் ஜான், அருள்மொழி, உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாவட்டத் தலைவர் ஏ.சி.சிதம்பரம் கலந்துகொண்டு பாஜக-வைக் கண்டித்து உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com