பெரியபாளையத்தை அடுத்த திருக்கண்டலம் ஊராட்சியில் கல்மேடு கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து மண் அள்ளிய பொக்லைன் இயந்திரத்தை ஊர் மக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்தனர்.
திருக்கண்டலம் ஊராட்சியில் தனியார் செங்கல் சூளைக்காக ஆற்றின் கரையை உடைத்து ஆழமாக மண் அள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த ஊர் மக்கள் மண் அள்ளப் பயன்படுத்தி வந்த பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியபாளையம் போலீஸார் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், மண் அள்ளும் தனியார் செங்கள் சூளையின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.