திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்: 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர். 


திருவள்ளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 2 பேரை கைது செய்தனர். 
 திருவள்ளூர் அருகே எறையூர் பகுதியில் புல்லரம்பாக்கம் போலீஸார் புதன்கிழமை அதிகாலை திடீர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எறையூர் ஏரியில் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் முன்னவேடு காலனியைச் சேர்ந்த சின்னத்தம்பி(30) மற்றும் அருணகிரி(35) என்பது தெரியவந்தது.  இதையடுத்து, அவர்களைக்  கைது செய்தனர். மேலும், அங்கிருந்த மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com