ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.04 கோடி பறிமுதல்

பூந்தமல்லி அருகே வாகனப் பரிசோதனையில் ஆவணம் எதுவும் இன்றி, கொண்டு செல்லப்பட்ட தனியார் வங்கியின் பணம் ரூ.1.04 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 


பூந்தமல்லி அருகே வாகனப் பரிசோதனையில் ஆவணம் எதுவும் இன்றி, கொண்டு செல்லப்பட்ட தனியார் வங்கியின் பணம் ரூ.1.04 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 
 பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் வங்கிக்குச் சொந்தமான வாகனம் ஒன்று வந்தது. அதை பறக்கும் படை அதிகாரி செல்லப்பாண்டி தலைமையில் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வாகனத்தில் இரும்புப் பெட்டியில் ரூ. 1.04 கோடி ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பின்னர், பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
 அப்போது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் கூறுகையில், அடையாறு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், வேலூர், காட்பாடி, இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள கிளை வங்கிகளுக்கு அன்றாட நடவடிக்கைக்கு பணம் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர். அதற்கான வங்கி ஆவணங்களையும் அதிகாரிகளிடம் அளித்தனர். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டு, பணத்தை பறிமுதல் செய்து, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். 
பின்னர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் ஆவணங்களை ஆய்வு செய்து, பணத்தை பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர். பின்னர், இது தொடர்பாக அதிகாரிகள் வங்கிக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து சிறப்பு அனுமதி கடிதம் பெற்று, பறக்கும் படை அதிகாரிகளிடம் அளித்து பணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com