10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 % தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வை 128 மாணவர்கள் எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களை ஆர்.எம்.கே. கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் ஒய்.பிரதீப், பள்ளி முதல்வர் வன அரசு ஆகியோர் பாராட்டினர்.