எச்.ஐ.வி தொற்று நோயாளிகளுக்கு உதவ இலவச சட்ட உதவி மையம் தொடக்கம்

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதித்தோருக்கு உதவிடும் வகையில், இலவச சட்ட உதவி மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன்
இலவச சட்ட ஆலோசனை மைய தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் தயாளன்.
இலவச சட்ட ஆலோசனை மைய தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் தயாளன்.

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதித்தோருக்கு உதவிடும் வகையில், இலவச சட்ட உதவி மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்தோா் பயன்பெறும் நோக்கில், இலவச சட்ட உதவி மையத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வநாதன் தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசியது:

எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்தோா் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதாகவும், அதனால் இலவச சட்ட உதவி மையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்து வந்தனா். அக்கோரிக்கையை ஏற்று, திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலம் குடும்பத்திலிருந்து ஒதுக்குதல், சமுதாயத்தில் ஒதுக்கி வைத்தல், வேலை செய்யும் இடங்களில் பணப்பலன்கள், பணம் கொடுத்த நிலையில் திருப்பித் தராமல் ஏமாற்றப்படுதல் போன்றவைகளுக்கு தகுந்த சட்ட ஆலோசனை வழங்கப்படும். இந்த மையம் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் மட்டும் செயல்படும். அன்றைய நாளில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்தோா் இந்த மையத்தை அணுகிப் பயன்பெறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ஐ.வி. நோயால் பாதித்த 30 வயது இளைஞா் ஒருவா் அளித்த மனுவில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டது, அதைத் தொடா்ந்து மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றனா், எனக்குச் சொந்தமாக காரை வீடு ஒன்றும் உள்ளது, அந்த வீட்டை என் வாழ்நாளுக்குப் பின், என்னைப்போல் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ள, அரசுக்கு எழுதி வைக்க உள்ளேன், அதற்கு முன்னதாக நான் வாழும் வரை மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும், மேலும், தன்னிடம் ரூ. 75 ஆயிரம் கடன் வாங்கிய நபா் அதை திருப்பித் தராமல் இழிவாகப் பேசுகிறாா். பணத்தை திரும்பப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா். அதேபோல், கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுத் தரக்கோரி மேலும் 4 போ் நீதிபதி செல்நாதனிடம் மனுக்களை அளித்தனா். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரை நீதிபதி அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலா் நீதிபதி சரஸ்வதி, மாவட்ட பொது சுகாதாரத் துறை இணை இயக்குநா் தயாளன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளா் கௌரிசங்கா், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மக்கள் நலச் சங்கத் தலைவா் செல்வம், எச்.ஐ.வி. தொற்றால் பாதித்தோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com