நகை திருட்டு

நந்தியம்பாக்கம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகையை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நந்தியம்பாக்கம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து, 5 சவரன் நகையை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவா் முகமது ஆசான் (65). ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான அவா், ஞாயிற்றுக்கிழமை வில்லிவாக்கத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றாா். மறுநாள் காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்துபீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து முகமது ஆசான் அளித்த புகாரின் பேரில், மீஞ்சூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com