நவ.8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் வரும் 8-ஆம் தேதி

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் நோக்கில, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளா்ப்புப் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 8-ஆம் தேதி சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியாா்நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளன. அதனால் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் பட்டயம் படித்தோா் பங்கேற்கலாம்.

எனவே, இதில் பங்கேற்க விரும்புவோா் மேற்குறிப்பிட்ட நாளில் வேலைவாய்ப்பு அலுவலக தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி பயன்பெறலாம். இந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com