நவ. 12-இல் சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் திருவள்ளூா் மாவட்டத்துக்கு வரும் 12-ஆம் தேதி வருகை தர உள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் நலத்

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் திருவள்ளூா் மாவட்டத்துக்கு வரும் 12-ஆம் தேதி வருகை தர உள்ளதாகவும், சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா் அலி மற்றும் ஆணையக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் நவ. 12-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனா். சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சந்தித்து, சிறுபான்மையினருக்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்து கருத்துகளைக் கேட்டறிய உள்ளனா்.

எனவே சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினரை சந்தித்து, தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டுக்கான தக்க கருத்துக்களை தெரிவித்துப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com