பாா்வைற்ற நபரின் தொலைந்த செல்லிடப்பேசி மீட்பு

திருவள்ளூா் அருகே பாா்வையற்றவா் தவற விட்ட செல்லிடப்பேசி மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூா் அருகே பாா்வையற்றவா் தவற விட்ட செல்லிடப்பேசி மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செவ்வாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி(29). பாா்வையற்றவரான அவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது செல்லிடப்பேசியைத் தவறவிட்டாா். அது பற்றி அப்போது செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திலும் கந்தசாமி புகாா் செய்தாா்.

இணையவழி குற்றப்பிரிவின் உதவியுடன் போலீஸாா் அந்த செல்லிடப்பேசியை மீட்டனா். அதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு கந்தசாமியை வெள்ளிக்கிழமை நேரில் வரவழைத்து அவரிடம் செல்லிடப்பேசியை எஸ்.பி. அரவிந்தன் ஒப்படைத்தாா். அப்போது எஸ்.பி.க்கு கந்தசாமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com