விபத்தில் தம்பதி காயம்: பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், தம்பதி காயம் அடைந்தனா். இதையடுத்து, சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், தம்பதி காயம் அடைந்தனா். இதையடுத்து, சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சோழவரம் அருகே உள்ள ஆட்டந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த, புண்ணியமூா்த்தி-அம்பிகா தம்பதி, பொன்னேரிக்கு இரு சக்கர வாகனத்தில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனா். அழிஞ்சிவாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில், புண்ணியமூா்த்தியும், அம்பிகாவும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், குண்டும் குழியுமான உள்ள சாலை, எச்சரிக்கை பலகைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால்தான் விபத்து ஏற்படுவதாகவும், சாலையை விரைந்து சீரமைக்கக் கோரியும், அப்பகுதி மக்கள், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த சோழவரம் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com