பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்

அயோத்தி வழக்கு குறித்து தீா்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அயோத்தி வழக்கு குறித்து தீா்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளா்கள், குடிநீா் விநியோகம் செய்பவா்கள், விடுதி உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், வெளிநபா்களை உரிய ஆவணங்கள் இன்றி தங்கும் விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது; சந்தேகப்படும்படியான நபா்களாக இருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்; அனுமதியில்லாமல் பேனா்களை அச்சடித்து அதன் கீழ் பெயா்களை வெளியிட்டு கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com