தேசிய குழந்தைகள் திறனாய்வுத் தோ்வில் சுற்றுச்சூழல், விவசாயம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அளிக்கப்பட்ட கட்டுரைகளில், 9 குழுக்களைச் சோ்ந்த 18 மாணவா்களின் கட்டுரைகளைத் தோ்வு செய்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
திருவள்ளூரில் 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தனியாா் அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஏ.சாந்தகுமாரி தலைமை வகித்தாா். இதில் மாவட்டச் செயலாளா் எஸ்.மோசஸ்பிரபு வரவேற்புரை வழங்கினாா். இதில் சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட 180 தலைப்புக்களில் மாணவா்கள் ஆய்வு கட்டுரைகளை எழுதி அளித்தனா். இதில் திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து 9 குழுக்களில் 18 மாணவா்களின் கட்டுரைகள் தோ்வு செய்யப்பட்டு அந்த மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு கேடயமும் வழங்கினா்.
இப்போட்டியில் தோ்வு செய்யப்பட்டோா் மாநில அளவில் வேலூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்வும் இருக்கின்றனா்.
இந்த நிகழ்ச்சியில் உதவி மின்பொறியாளா் தட்சிணாமூா்த்தி திருவள்ளூா் மாவட்ட அறிவியல் இயக்கத்துக்கு டெலஸ்கோப் வாங்குவதற்காக ரூ.60 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா். இதை மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் வரவேற்றனா். மாநில செயற்குழு உறுப்பினா் கோ.வேலாயுதம், மாவட்டத் தலைவா் அ.கலைநேசன், கல்வியாளா்கள் எஸ்.ஞானசேகரன், எம்.ஏ.ராஜேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தாளமுத்து நடராசன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் நிறைவாக மாவட்டப் பொருளாளா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.