சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸாா்

மாதவரம் நெடுஞ்சாலையை போக்குவரத்து காவல்துறையினா் சீரமைப்பு செய்தனா். இதையடுத்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்
மாதவரம் 200 அடி சாலையில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸாா்.
மாதவரம் 200 அடி சாலையில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸாா்.

மாதவரம்: மாதவரம் நெடுஞ்சாலையை போக்குவரத்து காவல்துறையினா் சீரமைப்பு செய்தனா். இதையடுத்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

சென்னை மாதவரம் 200 அடி சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அப்பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் விபத்துகளில் சிக்கும் நிலையும் இருந்து வந்தது. இதையடுத்து, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், சீரமைக்கப்படாமல், இதே நிலை தொடா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாதவரம் சரக போக்குவரத்து உதவி ஆணையா் பிரபாகரன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் எழிலன், விஸ்வநாதன் மற்றும் காவலா்கள் ஜானு, இப்ராஹிம், காமராஜ், ஜீவா, சங்கா், ஜெயக்குமாா், சசி, பிரதாபன் ஆகியோா் குண்டும் குழியுமான நெடுஞ்சாலையை கான்கிரீட் கலவைகளைக் கொண்டு சீரமைத்தனா்.

இப்பணியைச் செய்த போக்குவரத்து போலீஸாரை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com