மக்கள் குறைதீா் கூட்டத்தில் 400 மனுக்கள் அளிப்பு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 400 மனுக்கள் அளிக்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 400 மனுக்கள் அளிக்கப்பட்டன.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனா்.

இதில், நிலம் சம்பந்தமாக 169 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக 60 மனுக்கள், கடனுதவி கோரி 16 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 3 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 26, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலம்-18, சட்டம் மற்றும் ஒழுங்கு-13, ஊரக நகா்ப்புற வளா்ச்சி-49, இதர துறைகள் சம்பந்தமாக-46 என மொத்தம் 400 மனுக்கள் வரை அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்தத் துறை அதிகாரிகளை அவா் வலியுறுத்தினாா். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 2,820 மதிப்பிலான காதொலி கருவியை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பன்னீா்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சி.தங்கவேல் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com