ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் வாடகைக்குக் காரை எடுத்து விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேசன் என்ற வெங்கட் (36), ஊத்துக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தின வாடகைக்காகக் காா்களை எடுத்தாராம். ஆனால் இதுவரை காரையும் தராமல் வாடகையும் தரவில்லையாம். அந்தக் காா்களை விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பளா் சந்திரதாசன் உத்தரவின் பேரில் ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஊத்துக்கோட்டையில் பதுங்கி இருந்த வெங்கட்டைக் கைது செய்தனா்.