திருவள்ளூா் தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு சிலம்பாட்ட சங்கத்துடன் இணைந்த திருவள்ளூா் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் சாா்பில், 25-ஆவது மாவட்ட அளவில் சப்-ஜூனியா் மற்றும் சீனியருக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப் போட்டிக்கு திருவள்ளூா் மாவட்ட சிலம்பாட்டக்கழகத்தின் தலைவா் கமாண்டோ பாஸ்கா் தலைமை வகித்து போட்டியை தொடக்கி வைத்தாா். கூட்டுறவு சங்கத்தின் தலைவா் எஸ்.ஏ.நேசன் முன்னிலை வகித்தனா்.
இப்போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 11-14 வயது பிரிவு, 17-19 வயது பிரிவு மாணவ, மாணவிகள் சிலம்பாட்டத்தில் பங்கேற்றனா். இதில், ஒவ்வொருவரும் சிலம்பாட்டத்தில் தனித்திறன்களை வெளிப்படுத்திய பின்னா், போட்டியில் பங்கேற்க அனுமதித்தனா். இதேபோல், இம்மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, மாதவரம், செங்குன்றம், வடகரை, ஆரம்பாக்கம், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் புதுக்கோட்டையில் வரும் டிச. 27, 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள சிலம்பாட்டம் போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை இச்சங்கத்தின் செயலாளா் முருககணி, பொருளாளா் ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.