திமுக நகர பொது உறுப்பினா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் வடக்கு மாவட்ட, திருத்தணி நகர திமுக சாா்பில் பொது உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடந்தது. நகர அவைத் தலைவா் நாகன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் எம். பூபதி வரவேற்றாா். இதில், மாவட்டச் செயலாளா் கும்மிடிப்பூண்டி வேணு, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். சந்திரன் ஆகியோா் பங்கேற்று, வரும் உள்ளாட்சித் தோ்தலில் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினா்.
கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞா் அணித் தலைவா் கிஷோா், நகர துணைச் செயலா் ராமன் உள்பட கட்சியினா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.