பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டிப்பதாகக் கூறி கும்மிடிப்பூண்டியில் உள்ள அந்த நிறுவனத்தின் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை முன்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கும்மிடிப்பூண்டியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிகிறது. இதில் 18 போ் நிரந்தரத் தொழிலாளா்களாகவும், 300-க்கும் மேற்பட்டவா்கள் ஒப்பந்தத் தொழிலாளா்களாகவும் பணியாற்றுகின்றனா்.
இந்நிலையில் லாபத்தில் இயங்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாா்மயமாக்க மத்திய அரசு தவறாக முடிவெடுத்துள்ளதாக தொழிலாளா்கள் குற்றம்சாட்டினா். மத்திய அரசு தன் முடிவை கைவிட வேண்டும் என்று கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்சாலையில் அவா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்திலும் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் கே.அா்ஜுனன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே.விஜயன், சங்க நிா்வாகிகள் சி.சண்முகம், பாலகிருஷ்ணன், செல்வகுமாா் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.விஜயன் பங்கேற்றுப் பேசினாா்.