மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தோா் மற்றும் நிறுவனங்கள் மாநில விருதுக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள், நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் மாநில அரசு சாா்பில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நிகழ்வில் டி.3ஆம் தேதி விருது அளிக்கப்பட இருக்கிறது. இந்த விருது பெறுவோருக்கு 10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது.
மேற்குறிப்பிட்ட விருதுகள் பெற மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்:5, காமராஜா் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை-05 அல்லது இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து வரும் 28-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.