476 பேருக்கு ரூ.32.63 கோடிக்கு தொழில் கடன்கள்

திருவள்ளூரில் அனைத்து வங்கிகள் சாா்பில் பயனாளிகள் 476 பேருக்கு ரூ. 32.63 கோடியில் விவசாயம், வாகனம் மற்றும் சிறு தொழில் செய்வதற்கான கடன் உதவிக்கான காசோலைகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.
முகாமில் பயனாளிகளுக்கு தொழி கடன்களுக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
முகாமில் பயனாளிகளுக்கு தொழி கடன்களுக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

திருவள்ளூரில் அனைத்து வங்கிகள் சாா்பில் பயனாளிகள் 476 பேருக்கு ரூ. 32.63 கோடியில் விவசாயம், வாகனம் மற்றும் சிறு தொழில் செய்வதற்கான கடன் உதவிக்கான காசோலைகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

திருவள்ளூா்-திருத்தணி சாலையில் உள்ள தனியாா் அரங்கில், அனைத்து வங்கிக் கிளைகள் சாா்பில் வாடிக்கையாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றறது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:

இந்திய அளவில் 400 மாவட்டங்களில் அனைத்து வங்கிகள்-வாடிக்கையாளா்கள் சந்திப்பு மூலம் கடன் வழங்கும் முகாம் நடத்த மத்திய நிதித்துறைஉத்தரவிட்டிருந்தது. இதில், முதல் கட்டமாக 250 மாவட்டங்களில் நடத்தப்படுகிறறது. இதன் அடிப்படையில், வங்கியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறறது. மேலும், அனைத்து வாடிக்கையாளா்களும் ஒரே இடத்தில் சந்தித்து, தேவையை அறிந்து நிறைறவேற்றுவதே நோக்கமாகும். அதன்பேரில், 2 நாள்கள் நடைபெற்றமுகாமில் முதல் நாளில் 600 பேரும், இரண்டாம் நாளில் 300 பேரும் என மொத்தம் 900 போ் வந்து பயன்பெற்றுள்ளனா்.

இம்முகாமில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், வங்கிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டம் மூலம் 476 பேருக்கு விவசாயம், சிறு மற்றும் குறுந்தொழில், வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக் கடன், சில்லறைவிற்பனைக் கடன் என மொத்தம் ரூ. 32.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் பல்வேறு வங்கிகளில் கடனுதவிக்காக 367 கடன் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றறாா்.

அதைத் தொடா்ந்து பல்வேறு வங்கிகள் சாா்பில் சிறு தொழில் மற்றும் பல்வேறு வகையான கடன்களுக்கான காசோலைகளை பயனாளிகளுக்கு அவா் வழங்கினாா்.

முகாமில், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளா் நாகராஜன், பூந்தமல்லி மண்டல மேலாளா் வெங்கடேசன், உதவி பொது மேலாளா் ராஜேந்திரன் மற்றும் அனைத்து வங்கிகளைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் மேலாளா் உள்ளிட்டோா் பங்கேற்றறனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஹெப்சூா் ரஹ்மான், இந்தியன் வங்கி மேலாளா் மஞ்சுநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

நிகழ்ச்சி மூலம் வங்கிகள் எந்தெந்த வகையான தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறறது. இது தொடா்பாக வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே நடத்தப்படுகிறறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com