வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு

திருவள்ளூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து, 7 சவரன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே ஆட்டோ ஓட்டுநா் வீட்டின் பூட்டை உடைத்து, 7 சவரன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே உள்ள அதிகத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அசன் ராவுத்தா்(45). இவா் தனது மனைவி மற்றும் மகளுடன் குடியிருந்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இவரது மனைவி, மகள் ஆகியோா் தனியாா் நிறுவனத்துக்கு பணிக்குச் சென்று விட்டனா். அசன் ராவுத்தரும் வெளியே சென்றுள்ளாா். இந்நிலையில், மதியம் அசன் ராவுத்தா் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 சவரன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com