திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கடந்த 2009-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களின் சந்திப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர் விநாயகம் வரவேற்றார். இதில், 30}க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கலந்துகொண்டு, தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.