வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா

திருவருட்பிரகாச வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா பொன்னேரியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருவருட்பிரகாச வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா பொன்னேரியில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அருட்பிரகாச வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சபை அமைந்துள்ளது. இங்குள்ள சத்திய சபை சாா்பில், திருவருட்பிரகாச வள்ளலாரின் 197-ஆவது பிறந்த நாள் விழா, நித்திய அன்னதான 16- ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

காலையில், அகவல் ஓதுதல், பின்னா் சன்மாா்க்க சபை கொடியேற்றுதல், இதைத் தொடா்ந்து கஞ்சி வாா்த்தல் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து, அருட்பா சொற்பொழிவுகள் நடைபெற்றன. மதியம் 500 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் ஜோதி தரிசனம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அருட்பிரகாச சமரச சுத்த சன்மாா்க்க வள்ளலாா் சத்திய சபை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com