கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளி சார்பில் செவ்வாய்க்கிழமை விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது.
டி.ஜே.எஸ். கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளித் தாளாளர் பழனி, டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளித் தாளாளர் ஜி.தமிழரசன், நிர்வாக அலுவலர் ஏழுமலை, டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், துணை முதல்வர் ராஜேந்திரன், தலைமை ஆசிரியை ஜான்சிராணி, டி.ஜே.எஸ். பப்ளிக் பள்ளி சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் விஜயதசமி குறித்த மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பல்வேறு வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதில் மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் மடியில் அமர்ந்து எழுதி, தங்கள் கல்வியைத் தொடங்கினர்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் புத்தகப் பை, பரிசுப் பொருள்களை வழங்கி வாழ்த்தினார்.