நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் 11- ஆம் தேதி திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பல தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் கலந்துகொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் முகாம் நடைபெற உள்ளது. இதற்கு முன்பு கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் தோ்வு செய்யப்பட்ட 23 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com